Feb 4, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு தைப்பூசம் கொண்டாட்டம்: 8 புகார்கள் பதிவு – போலீஸ் தலைவர் தகவல்
தற்போதைய செய்திகள்

பினாங்கு தைப்பூசம் கொண்டாட்டம்: 8 புகார்கள் பதிவு – போலீஸ் தலைவர் தகவல்

Share:

ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.04-

பினாங்கு மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற தைப்பூச திருவிழாவின் போது, பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 8 போலீஸ் புகார்கள் பெறப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இரண்டு வன்முறைக் குற்றங்கள் மற்றும் இரண்டு சொத்து தொடர்பான குற்றங்களுக்காக நான்கு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அஸிஸி, விசாரணைகளுக்கு உதவுவதற்காக இரண்டு உள்ளூர் ஆடவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மற்றபடி, 2026 தைப்பூச கொண்டாட்டமானது திட்டமிட்டபடி, சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற்றதாக அஸிஸி குறிப்பிட்டுள்ளார்.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய ராயல் மலேசியா போலீஸ் படையின், பினாங்கு பிரிவு சார்பில், 1,280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News

மீதமுள்ள உணவுகளைக் கழுவி மீண்டும் பயன்படுத்திய குற்றச்சாட்டு: சர்ச்சைக்குள்ளான உணவகத்தை இரண்டு வாரங்களுக்கு மூட சுகாதாரத்துறை உத்தரவு

மீதமுள்ள உணவுகளைக் கழுவி மீண்டும் பயன்படுத்திய குற்றச்சாட்டு: சர்ச்சைக்குள்ளான உணவகத்தை இரண்டு வாரங்களுக்கு மூட சுகாதாரத்துறை உத்தரவு

காரில் தப்பிச் செல்ல முயன்ற போது விபத்து: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் பலி

காரில் தப்பிச் செல்ல முயன்ற போது விபத்து: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் பலி

புக்கிட் பிந்தாங் அழகு நிலையத்தில் அதிரடிச் சோதனை - 15 வெளிநாட்டினர் கைது

புக்கிட் பிந்தாங் அழகு நிலையத்தில் அதிரடிச் சோதனை - 15 வெளிநாட்டினர் கைது

ஓடும் காரிலிருந்து சாலையில் விழுந்த இளைஞர் மரணம்

ஓடும் காரிலிருந்து சாலையில் விழுந்த இளைஞர் மரணம்

கோலாலம்பூரில் போலி துப்பாக்கி வைத்திருந்த வங்கதேச ஆடவர் கைது

கோலாலம்பூரில் போலி துப்பாக்கி வைத்திருந்த வங்கதேச ஆடவர் கைது

ஊராட்சி மன்றத் தேர்தல் ஆய்வை மறுபரிசீலனை செய்யுமாறு பெரிக்காத்தான் நேஷனல் வலியுறுத்து

ஊராட்சி மன்றத் தேர்தல் ஆய்வை மறுபரிசீலனை செய்யுமாறு பெரிக்காத்தான் நேஷனல் வலியுறுத்து