Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியர்களின் விடுமுறை திட்டம் உட்பட 10 பரிசுகள்
தற்போதைய செய்திகள்

ஆசிரியர்களின் விடுமுறை திட்டம் உட்பட 10 பரிசுகள்

Share:

இன்று கொண்டாடப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆரிசியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்களுக்கான புதிய 10 உதவிகளைக் கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் இந்த புதிய திட்டம், ஆசிரியர்களின் நலனை வலுப்படுத்தவும், வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்கவும், தேசியப் பொருளாதாரம் மற்றும் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.

கல்வி அமைச்சு அறிவித்துள்ள குறைந்த விலையிலான ஆசிரியர் விடுமுறை திட்டத்தின் மூலம், மனதை தளர்த்துவதற்கான வாய்ப்புகளை அது வழங்குவதாக ஃபட்லினா சிடெக் குறிப்பிட்டார்.

மேலும், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, ஏர் ஏசியா விமான நிறுவனம், டிரேவல்லோக்கா மற்றும் பேங்க் ரக்யாட் ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துவதன் வாயிலாக, விமான டிக்கெட்டுகள், தங்குமிடம், தரைவழி போக்குவரத்து மற்றும் தீம் பார்க் ஆகியவற்றிக்கு தள்ளுபடிகள் ஆசியர்களுக்கு வழங்கப்படுவதாக ஃபட்லினா சிடெக் விவரித்தார்.

இன்று மலாக்கா, அனைத்துலக வாணிப மையத்தின் அரங்கில், 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய நிலையிலான ஆசிரியர் தினம் கொண்டாட்டத்தை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்தப் பின்னர், ஃபட்லினா சிடெக் உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு