நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள், மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருனுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜசெக மற்றும் அமானா கட்சிகள், கடந்த மாநிலத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை அம்னோ மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
ஜசெக. பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறுகையில், "அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமினுடின் ஹருன் மந்திரி பெசராக தொடர்வதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.
'பின்வாசல் அரசாங்கம்' அமைக்கும் எந்த முயற்சிக்கும் நாங்கள் துணை போக மாட்டோம்" எனத் தெரிவித்தார். மாநிலத்தின் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த இந்தச் சிக்கல் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்.








