Apr 2, 2026
Thisaigal NewsYouTube
4 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

4 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்தனர்

Share:

பெண்டாங், மார்ச்.19-

நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் மூவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமுற்றனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.24 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, 58.4 ஆவது கிலோமீட்டர் , கெடா, பெண்டாங் அருகில் நிகழ்ந்தது.

ஒரு புரோட்டோன் சாகா BLM ரக கார், ஒரு 4 Wheel Drive வாகனம் மற்றும் இரண்டு லோரிகள் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக பெண்டாங் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத் தலைவர் சுல்கிப்ளி மானாவ் தெரிவித்தார்.

உயிரிந்தவர்களின் உடல்களை வாகனத்தின் இடிப்பாடுகளிலிருந்து மீட்பதற்கு தீயணைப்புப் படையினர், பிரத்தியேக சாதனங்களைப் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News