நாட்டில் உள்ள அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் நிர்வாக அம்சங்களை மேம்படுத்துதற்கு அரசாங்கம் தொடர்ந்து கடப்பாடு கொண்டு இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
புத்ரா ஜெயாவில் நேற்று மனித வள அமைச்சர் ஸ்தீவன் சிம் சீ - யுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாக அம்சங்கள் தொடர்புடைய விவகாரங்கள் தொடர்ந்து பலப்படுத்துவது குறித்து முக்கியமாக விவாதித்ததாக சைஃபுடின் நசுத்தியோன் குறிப்பிட்டார்.
அதேவேளையில் அந்நியத் தொழிலாளர்கள் / முதலாளிமார்கள் அல்லது குறிப்பிட்டத் தரப்பினரால் சுரண்டப்படும் சம்பவங்கள் குறித்தும் மனித வள அமைச்சருடன் தாம் விவாதித்ததாக சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
தவிர அந்நியத் தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதற்கு முன்னதாக அரசு தொடர்புடைய நிர்வாக நடைமுறைகளை உள்துறை அமைச்சும், மனித வள அமைச்சும் இணைந்து மேற்கொள்வதற்கு தாங்கள் உறுதி பூண்டு இருப்பதாக சைஃஃபிடின் நசுத்தியோன் குறிப்பிட்டார்.








