ஜோர்ஜ் டவுனில் உள்ள ஜாலாங் சுங்கை மக்கள் குடியிருப்புப் பகுதியில் கைகலப்பில் ஈடுபட்ட ஐவரை காவல் துறை கைது ச்ய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் நடந்த இந்த கைகலப்பில் ஈடுபட்ட ஐவரில் ஒருவர் பினாங்கு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் என தீமூர் லாவுட் மாவட்டக் காவல் துறையின் இடைக்காலத் தலைவர் சுப்பெரிதென்டன் வி சரவனான் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டபோது, ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், எஞ்சிய நால்வரும் ஒரு காரில் தப்பிச் சென்றவர்களை காவல் துறையினர் மோட்டார் சைக்கிளில் துரத்திய போது விபத்துக்குள்ளாகின.
அந்த ஐவருக்குள் ஏற்பட்டக் கருத்து வேறுதான் அந்தச் சண்டைக்குக் காரணம் எனவும் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 24 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் என சரவணன் குறிப்பிட்டார்.








