Mar 17, 2026
Thisaigal NewsYouTube
48 விபச்சாரப் பெண்கள் கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

48 விபச்சாரப் பெண்கள் கைது செய்யப்பட்டனர்

Share:

செர்டாங், பிப்ரவரி 24 -

கோம்பாக், செர்டாங், செந்தூல் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட 13 ஓபி னோடா திடீர் சோதனையில் கைது செய்யப்பட்ட 64 நபர்களில் 48 பேர் வெளிநாட்டு விபச்சாரப் பெண்கள் என்று நம்பப்படுகின்றது.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் தொடங்கிய இச்சோதனை கிள்ளான் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள விபச்சார நடவடிக்ககைகளை புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறையின் பிரிவு டி7 கண்காணிப்பின் மூலம் தெரியவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் சம்பந்தப்பட்ட வளாகத்தின் மேலாளர்களாகக் கருதப்படும் 14 உள்ளூர் ஆண்களும் இரண்டு வெளிநாட்டுப் பெண்களும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்தார்.

குறிப்பிடப்பட்ட மசாஜ் வளாகங்கள் சட்டவிரோதமாக அந்நிய பெண்களை வேலைக்கு வைப்பது மட்டுமின்றி விபச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஊக்குவிப்பதாக சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அப்பெண்களுடன் உடலுறவில் ஈடுப்பட்டிருந்த வெளிநாட்டு ஆண்கள் மற்றும் தனிப்பட்ட பயண ஆவணமின்றி இருப்பவர்களும் கைது செய்யப்பட்டதாக முகமட் ஷுஹைலி கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

48 விபச்சாரப் பெண்கள் கைது செய்யப்பட்டனர் | Thisaigal News