கிளந்தான்,ஜூலை 27-
கிளந்தானில், குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட Nenggiri சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் DAP பிரச்சாரத்தில் ஈடுபடுவது பொருத்தமற்றது என்று அம்னோ மூத்த உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவர் Datuk Mustapha Yaakub தெரிவித்துள்ளார்.
Nenggiri சட்டமன்றத் தொகுதியில் DAP களமிறங்குவது அத்தொகுதியில் உள்ள பெரும்பான்மையான மலாய்க்கார வாக்காளர்களைக் குழப்பக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த இடைத் தேர்தலில் அம்னோவிற்கு ஆதரவாக DAP களம் இறங்கி பிரச்சாரம் செய்வதை மதிக்கிறோம். ஆனால், அவர்களின் வரவு நிலைமையை மோசமாக்கி விடும். அந்த சட்டமன்றத் தொகுதியில் சீனக் கிராமங்கள் எதுவும் இல்லாததால் DAP பிரச்சாரத்தில் ஈடுபடுவது தேவையற்றதாகவே கருதப்படுகிறது என்று அந்த மூத்த அரசியல்வாதி தெளிவுபடுத்தினார்.
எனினும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு DAP-க்கு பாரிசான் நேஷனல் தடை விதித்து இருப்பதாக கூறப்படுவதை அவர் வன்மையாக மறுத்துள்ளார்.








