Apr 25, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா - புருணை சிறப்பு உறவு: உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் உறுதி
தற்போதைய செய்திகள்

மலேசியா - புருணை சிறப்பு உறவு: உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் உறுதி

Share:

மலேசியா மற்றும் புருணை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் மீண்டும் உறுதிபூண்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

புருணை சுல்தான் ஹாசனல் போல்கியாவுடன் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகுப் பேசிய பிரதமர், இந்த உறவு வெறும் ராஜதந்திர ரீதியானது மட்டுமல்ல, இது ஒரு சகோதரத்துவப் பிணைப்பு என்றார்.

நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ள இந்தச் சிறப்பு உறவு, பிராந்திய மற்றும் உலகளாவிய பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளுக்கும் பக்கபலமாக இருக்கும் என்று டத்தோஸ்ரீ பெருமிதம் தெரிவித்தார்.

குறிப்பாக வர்த்தகம், முதலீடு, எரிபொருள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு போன்ற முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கலந்தாலோசித்தனர். இரு நாடுகளின் மக்களின் நலனைப் பாதுகாக்கவும், அமைதியான எதிர்காலத்தை உருவாக்கவும் தொடர்ந்து இணைந்து பாடுபட இரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.

Related News

பொதுமக்களின் பணம் இனி பாதுகாப்பாக இருக்கும்! தொண்டு நிறுவனங்களுக்குப் புதிய கிடுக்கிப்பிடி

பொதுமக்களின் பணம் இனி பாதுகாப்பாக இருக்கும்! தொண்டு நிறுவனங்களுக்குப் புதிய கிடுக்கிப்பிடி

ஒரே நாடு, ஒரே தேர்தல்": பிரதமர் அன்வாரின் கருத்துக்கு சனுசி அதிரடி ஆதரவு

ஒரே நாடு, ஒரே தேர்தல்": பிரதமர் அன்வாரின் கருத்துக்கு சனுசி அதிரடி ஆதரவு

தங்காப் ஆசம் பாக்கி போராட்டம்: பட்டாசு வெடித்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தங்காப் ஆசம் பாக்கி போராட்டம்: பட்டாசு வெடித்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வெடித்தது எரிவாயு குழாயா? குவாந்தானில் பரவிய வீடியோவால் பரபரப்பு: தீயணைப்புத் துறை விளக்கம்

வெடித்தது எரிவாயு குழாயா? குவாந்தானில் பரவிய வீடியோவால் பரபரப்பு: தீயணைப்புத் துறை விளக்கம்

சுட்டெரிக்கும் வெயில்: 41 பேருக்கு பாதிப்பு! மலேசியாவில் 'வெப்ப வாத தாக்குதல்' எச்சரிக்கை

சுட்டெரிக்கும் வெயில்: 41 பேருக்கு பாதிப்பு! மலேசியாவில் 'வெப்ப வாத தாக்குதல்' எச்சரிக்கை

3 முறை பதவி நீட்டிப்பு எனக்குக் கிடைத்த கௌரவம்!" - ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் ஆசாம் பாக்கி உருக்கம்

3 முறை பதவி நீட்டிப்பு எனக்குக் கிடைத்த கௌரவம்!" - ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் ஆசாம் பாக்கி உருக்கம்