May 25, 2026
Thisaigal NewsYouTube
அந்த ஆயிர் பிடிபட்டார்.
தற்போதைய செய்திகள்

அந்த ஆயிர் பிடிபட்டார்.

Share:

சிரம்பன், செப்டம்பர் 29-

வீட்டின் வெளியே உளர வைக்கப்படும் துணிகளை திருடி வந்த நபர், இறுதியில் பிடிபட்டதைத் தொடர்ந்து குடியிருப்பாளர்களுக்கு போலீசார் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

கொடிகளில் உளர வைக்கப்படும் துணிகள் களவாடப்படுவதாக செரம்பன் தமன் சிப் ஐக், வீடமைப்புப் பகுதியைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு இடையிலான வாட்ஸ்-சாப் புலனத்தில் தகவல்களை பரிமாறிக் கொண்டதன் விளைவாக ரகசிய கேமரா-வில் சிக்கிய 30 வயது நபரை குடியிருப்பாளர்கள் கையும் களவுமாக பிடித்தனர் என்று சிரம்பன் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஹட்டா சே பின் தெரிவித்தார்.

குடியிருப்பாளர்கள் மத்தியில் இதுபோன்ற தகவல் பரிமாற்றுங்கள், குற்றச்செயல்களை தடுக்க முடியும் என்று முடியும் அவர் குறிப்பிட்டார்.

Related News