நெகிரி செம்பிலான், லோபாக் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் சியு செஹ் யொங் கை ஆதரித்து டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், நேற்று மாபெரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
சிரம்பான் சுங் ஹுவா சீன தொடக்கப்பள்ளியின் முன்புறமுள்ள உணவகத் தளத்திற்கு அருகில் பிரதான மேடையில் உரையாற்றிய லிம் கிட், 66 ஆண்டுகளுக்கு முன்பு இதே சிரம்பானில்தான் 6 கிளைகளுடன் டிஏபி தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார். டிஏபியின் முன்னோடித் தலைவரான ச்ஹென் மன் ஹின் 1966 ஆம் ஆண்டு ரஹாங் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட போது டிஏபியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 2 ஆயிரம் பேராகும். ஆனால் அந்த எண்ணிக்கை இன்று 100 மடங்கிற்கும் அதிகமாக உள்ளது என்றால் டிஏபியின் சுலேகமான மலேசியக் கனவாகும்.
பல்லினத்தவர், பல்லின மக்கள், பல்வேறு காலச்சாரம், பன்மொழிகள் என்று ஒரு மலேசிய இனத்தை காண்பதற்கு டிஏபி அன்று முன்வைத்த சுலோகம்தான் இன்று அடித்தளமாக மாறியுள்ளது என்று சுமார் 1,500 பேர் கலந்து கொண்ட மாபெரும் நிகழ்வில் உரையற்றுகையில் முன்னாள் இஸ்கண்டார் புத்ரி எம்.பி.யுமான லிம் கிட் சியாங் குறிப்பட்டார்.
பணத்திற்காகவோ, பட்டத்திற்காகவோ, பதவிக்காகவோ டிஏபி தனது அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. டிஏபியின் சிந்தாந்தத்திற்காகவே அதன் போராட்டம் தொடர்கிறது. அந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் சட்டமன்ற உறுப்பினர்களில் லோபாக் சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிடும் சியு செஹ் யோங்கும் ஒருவர் ஆவார். அவரை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்து, வெற்றி பெற செய்யுமாறு லோபாக் வாக்காளர்களை லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார்.








