புகை பிடிப்பதை நிறுத்தும் முன்னெடுப்பில், மக்களவை உறுப்பினர்களும் மேலவை உறுப்பினர்களும் மக்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்க வேண்டும் என துணை சுகாதார அமைச்சர் லுக்கனிஸ்மான் அவாங் சவுனி தெரிவித்தார்.
நாட்டின் சட்டத்தை வடிவமைக்கும் அவர்கள் மட்தியில் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களும் இருக்கின்றார்கள். அந்த விவகாரம், சமூக ஊடகங்களிலும் பரவி வருகிறது.
எனவே, புகையிலைக் கட்டுப்பாட்டு சட்டத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டுமோ, அதே அளவுக்கு மக்கள் நிகராளிகளான மக்களை, மேலவை உறுப்பினர்கள் புகை பிடிப்பதைத் தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என லுகனிஸ்மான் அவாங் சவுனி நாடாளுமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.








