கோலாலம்பூர், மார்ச்.22-
ஹரி ராயா பண்டிகையின் முதல் நாளில் மட்டும் நாடு முழுவதும் 1,304 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், பண்டிகைக் காலத்தில் நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்தைச் சீர் செய்யவும், விபத்துகளைத் தவிர்க்கவும் நாடு முழுவதும் 5,544 போக்குவரத்துப் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.








