Jun 30, 2026
Thisaigal NewsYouTube
 கூலிமில் கோர விபத்து: தொழிற்சாலை தொழில்நுட்பவியலாளர் பலி
தற்போதைய செய்திகள்

கூலிமில் கோர விபத்து: தொழிற்சாலை தொழில்நுட்பவியலாளர் பலி

Share:

கூலிம் - செர்டாங் சாலையில் நேற்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில், 45 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காலை 8.30 மணியளவில், கேஎச்திபி 16 (KHTP 16) சாலைச் சந்திப்பில் உள்ள சமிிக்ஞை விளக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்து கூலிம் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் டி.எஸ்.பி. தெங்கு முகமட் ஃபாய்சால் தெங்கு யேங் விடுத்துள்ள அறிக்கையில், உயிரிழந்தவர் தாமான் டேசா இம்பியானைச் சேர்ந்த 45 வயதுடைய சுல் ஹாஷிமி பின் அப்துல் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழில்நுட்பவியலாளராக பணியாற்றி வந்தவர்.

இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டதில் , கூலிம் உத்தாமா சாலையிலிருந்து 'ஹோண்டா வாரியோ' ரக மோட்டார் சைக்கிளில் வந்த சுல் ஹாஷிமி, பச்சை நிறச் சமிிக்ஞை விழுந்ததும் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, கூலிம் அவென்யூவிலிருந்து சுங்கை ஊலார் நோக்கி நேர் சாலையில் வந்து கொண்டிருந்த 'பெருடுவா மைவி' கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இரு வாகனங்களும் மிக அருகில் வந்ததால், காரை ஓட்டி வந்தவரால் விபத்தைத் தவிர்க்க முடியாமல் போனதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோதலில் பலத்த காயமடைந்த சுல் ஹாஷிமி அந்த இடத்திலேயே உயிரிழந்தார் என்று தெங்கு முகமட் ஃபாய்சால் தெரிவித்தார்.

Related News

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு