நோன்புப் பெருநாள் விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று மதியம் முதல் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிறுவனமான பிளஸின் (PLUS) அதிகாரப்பூர்வத் தகவலின்படி, பினாங்கின் பெர்த்தாம் முதல் கெடாவின் சுங்கை பட்டாணி வரை வாகனங்கள் மெதுவாக நகர்ந்து வருகின்றன.
தென் பகுதியில், நெகிரி செம்பிலானின் பண்டார் பாரு நீலாய் முதல் பண்டார் ஐன்ஸ்டேல் வரையிலும், செனவாங் முதல் போர்டிக்சன் வரையிலும் போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது.
அதேபோல், ஜொகூரில் செனாய் முதல் கூலாய் வரையிலும், பேராவில் கோலாகங்சார் முதல் ஈப்போ வரையிலான பகுதிகளிலும் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் வாகனமோட்டிகள் மற்றும் பயணிகள் மிகுந்த பொறுமையை கையாளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








