May 26, 2026
Thisaigal NewsYouTube
மில்லியன் கணக்கான பணத்தை இழந்த மூதாட்டி
தற்போதைய செய்திகள்

மில்லியன் கணக்கான பணத்தை இழந்த மூதாட்டி

Share:

கோலாலம்பூர், டிச. 17-


நேரடி சந்திப்பின்றி, ஓன்லைன் மூலம் ஆடவர் ஒருவருடன் காதல் வலையில் விழுந்து கிடந்ததாக நம்பப்படும் 67 மூதாட்டி ஒருவர் Love Scam மோசடியில் தனது வாழ்நாள் சேமிப்பு பணமாண 22 லட்சம் ரிங்கிட்டை இழந்துள்ளார்.

சுமார் 7 ஆண்டு காலமாக அந்த ஆடவர் தன்னிடமிருந்து சன்னம், சன்னமாக பணத்தை கறந்துள்ளார் என்று அந்த மூதாட்டி போலீஸ் புகார் அளித்து இருப்பதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றத்தடுப்பு பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி யூசோப் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகமான அந்த ஆடவர், தன்னை அமெரிக்க வர்ததகர் என்றும், சிங்கப்பூரில் மருத்துவ உபகரண்ங்களை விற்பனை செய்வதாகவும் கூறி, அந்த மூதாட்டியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு பிறகு இருவரும் ஓன்லைன் தொடர்பிலேயே நெருக்கமான ஆனப்பின்னர் அவசரத் தேவைக்காக முதலில் அந்த மூதாட்டியிடமிருந்து 5 ஆயிரம் ரிங்கிட்டை பெற்றவர், பின்னர் ஆசைவார்த்தைகளை கூறியே , அந்த வயோதிகப் பெண்மணியை வசப்படுத்தி, கட்டம் கட்டமாக பணத்தைப் பெற்றுள்ளார்.

50 க்கும் மேற்பட்ட மாறுப்பட்ட வங்கிக்கணக்குகளில் 305 வங்கி பண பரிமாற்றத்தின் வாயிலாக சம்பந்தப்பட்ட ஆடவரிடம் அந்த மூதாட்டி, மொத்தம் 22 லட்சத்து பத்தாயிரம் வெள்ளியை இழந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோஸ்ரீ ரம்லி யூசோப் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு