Jul 5, 2026
Thisaigal NewsYouTube
42 மணி நேர வேலை நேரம்: சுகாதாரச் சேவைத் தரத்தை உறுதிச் செய்துள்ளது
தற்போதைய செய்திகள்

42 மணி நேர வேலை நேரம்: சுகாதாரச் சேவைத் தரத்தை உறுதிச் செய்துள்ளது

Share:

கோலாலம்பூர், ஜூலை.12-

சுகாதாரப் பணியாளர்களின் ஷிப்டு வேலை நேரத்தை 42 மணி நேரமாகக் குறைக்கப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவு, அவர்களின் உடல், மனம், உணர்வு ரீதியான ஆரோக்கிய நிலைகளைப் பராமரிக்க உதவும் என்று பொதுச் சேவை ஊழியர்களின் தொழிற்சங்கமான கியூபெக்ஸ் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் பொதுச் சுகாதார சேவைகளின் தரம் தொடர்ந்து சிறந்த நிலையில் இருப்பதையும் இந்த முடிவு உறுதிச் செய்துள்ளது என்று கியூபெக்ஸின் தலைவர் டத்தோ டாக்டர் அட்னான் மாட் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது, அறிவார்ந்த செயலாகவும், மக்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர்களின் பரிவு, நலன் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றின் மதிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் மடானி மலேசியாவின் மனப்பான்மைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுச் சேவை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அடிப்படை முடிவுகளை எடுப்பதில் கூட்டுப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கும், குரல் கொடுப்பதற்கும் தொடர்ந்து இடம் அளித்ததற்காக அரசாங்கத்திற்கு கியூபெக்ஸ் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அட்னான் மாட் கூறினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது