Jul 3, 2026
Thisaigal NewsYouTube
உயர் அதிகாரி உட்பட 5 போலீஸ்காரர்கள் கைது
தற்போதைய செய்திகள்

உயர் அதிகாரி உட்பட 5 போலீஸ்காரர்கள் கைது

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.02-

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை வைத்திருந்த குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்காமல் இருக்க 9 ஆயிரம் ரிங்கிட்டை கையூட்டாகக் கேட்டுப் பெற்றதாக நம்பப்படும் உயர் போலீஸ் அதிகாரி உட்பட 5 போலீஸ்காரர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

20 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐந்து பேரும் பினாங்கு எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு, பிற்பகல் மணி 2 க்கும் 5 க்கும் இடைப்பட்ட நேரத்தில் கைது செய்யப்பட்டதாக பினாங்கு மாநில எஸ்பிஆர்எம் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை செபராங் பிறையில் நடத்தப்பட்ட சோதனையில் திருட்டு மோட்டார் சைக்கிள் வைத்திருந்த நபருக்கு உடந்தையாக இருந்ததாக ஐந்து போலீஸ்காரர்களும் சந்தேகிக்கப்படுகின்றனர்.

திருட்டு மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்கிய ஒரு மோட்டார் சைக்கிள் பட்டறையிடமிருந்து போலீஸ்காரர் ஒருவர் கையூட்டாக ரொக்கமாக 9 ஆயிரம் ரிங்கிட் பெற்றுச் சென்றதாக நம்பப்படுகிறது.

இந்த ஐவரும் 2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பதை பினாங்கு மாநில எஸ்பிஆர்எம் இயக்குநர் டத்தோ எஸ். கருணாநிதி உறுதிப்படுத்தினார்.

24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட ஐவரும் விசாரணைக்கு பின்னர் எஸ்பிஆர்எம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின்  Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின் Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு