May 18, 2026
Thisaigal NewsYouTube
மியான்மர் நெருக்கடிக்கு சீனா ஆதரவு: நன்றி தெரிவித்தது மலேசியா
தற்போதைய செய்திகள்

மியான்மர் நெருக்கடிக்கு சீனா ஆதரவு: நன்றி தெரிவித்தது மலேசியா

Share:

புத்ராஜெயா, ஜூலை.11-

மியான்மாரில் நிலவும் நெருக்கடிக்கு ஆசியான் அமைப்பின் ஐந்து அம்சக் கருத்தொற்றுமையின் அமலாக்கத்திற்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக மலேசியா தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் புத்ராஜெயாவில் இன்று நடந்த சந்திப்பின் போது இதைத் தெரிவித்தார்.

தென் சீனக் கடல் பிரச்சினையில் அனைத்துலகச் சட்டத்தின் அடிப்படையிலான அமைதியான தீர்வுக்கும் அவர் முக்கியத்துவம் அளித்தார். இந்தச் சந்திப்பில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அன்வார் இப்ராஹிம் கூறினார். சீனா தொடர்ந்து 16 ஆண்டுகளாக மலேசியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்து வருகிறது.

Related News