கோலாலம்பூர், பிப்ரவரி.24-
இந்தியாவில் பதிவான நிப்பா வைரஸ் சம்பவங்களைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு செயல்படுத்திய 'எச்சரிக்கை' நிலையை, தற்போது 'கண்காணிப்பு' நிலைக்குக் குறைத்துள்ளது.
கடந்த ஜனவரி 29 முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை 60 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் புதிய பாதிப்புகள் கண்டறியப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை நிலை நீக்கப்பட்டாலும், அனைத்துலக எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் உள்நாட்டு சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளது.








