மாநிலத் தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் சனிக்கிழமையன்று வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை 19 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தங்கள் சொந்த கிராமங்களுக்கு அல்லது வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல விரும்பும் மக்கள், வாகன நெரிசலைக் கருத்தில் கொண்டு பயணத்தைத் திட்டமிட நினைவுறுத்தப்பட்டுள்ளனர்.
சாதாரண நாட்களை விட ஆகஸ்ட் 11 முதல் 12 வரை வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் அதிக நேரம் பயணிக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப் படுவதாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை பராமரிக்கும் பிலஸ் நிறுவனத்தின் மூத்தப் பொது மேலாளர் முகமட் யூசுப் அப்துல் அஜிஸ் கூறினார்.
இருப்பினும், பொது மக்களின் பயணம் வசதியாக அமைந்திருப்பதை உறுதி செய்வதற்கு உதவும் பொருட்டு டோல் சாவடிகள் உட்பட வியூகம் நிறைந்த பகுதிகளில் ஓய்வு இடங்களையும், இதர வசதிகளையும் உள்ளடக்கிய முன்னேற்பாடுகளைச் பிலஸ் நிறுனம் செய்துள்ளதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: விரிவான விசாரணையை நடத்துவீர் - புக்கிட் அமானுக்கு கோரிக்கை

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்


