மாநிலத் தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் சனிக்கிழமையன்று வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை 19 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தங்கள் சொந்த கிராமங்களுக்கு அல்லது வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல விரும்பும் மக்கள், வாகன நெரிசலைக் கருத்தில் கொண்டு பயணத்தைத் திட்டமிட நினைவுறுத்தப்பட்டுள்ளனர்.
சாதாரண நாட்களை விட ஆகஸ்ட் 11 முதல் 12 வரை வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் அதிக நேரம் பயணிக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப் படுவதாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை பராமரிக்கும் பிலஸ் நிறுவனத்தின் மூத்தப் பொது மேலாளர் முகமட் யூசுப் அப்துல் அஜிஸ் கூறினார்.
இருப்பினும், பொது மக்களின் பயணம் வசதியாக அமைந்திருப்பதை உறுதி செய்வதற்கு உதவும் பொருட்டு டோல் சாவடிகள் உட்பட வியூகம் நிறைந்த பகுதிகளில் ஓய்வு இடங்களையும், இதர வசதிகளையும் உள்ளடக்கிய முன்னேற்பாடுகளைச் பிலஸ் நிறுனம் செய்துள்ளதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


