மாநிலத் தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் சனிக்கிழமையன்று வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை 19 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தங்கள் சொந்த கிராமங்களுக்கு அல்லது வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல விரும்பும் மக்கள், வாகன நெரிசலைக் கருத்தில் கொண்டு பயணத்தைத் திட்டமிட நினைவுறுத்தப்பட்டுள்ளனர்.
சாதாரண நாட்களை விட ஆகஸ்ட் 11 முதல் 12 வரை வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் அதிக நேரம் பயணிக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப் படுவதாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை பராமரிக்கும் பிலஸ் நிறுவனத்தின் மூத்தப் பொது மேலாளர் முகமட் யூசுப் அப்துல் அஜிஸ் கூறினார்.
இருப்பினும், பொது மக்களின் பயணம் வசதியாக அமைந்திருப்பதை உறுதி செய்வதற்கு உதவும் பொருட்டு டோல் சாவடிகள் உட்பட வியூகம் நிறைந்த பகுதிகளில் ஓய்வு இடங்களையும், இதர வசதிகளையும் உள்ளடக்கிய முன்னேற்பாடுகளைச் பிலஸ் நிறுனம் செய்துள்ளதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

சொத்துப் பிரகடன வழக்கு: இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான குற்றச்சாட்டு ஆகஸ்ட் 27-க்கு ஒத்திவைப்பு

260 மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகளுக்கும் கட்டாய போதைப் பொருள் பரிசோதனை: மலேசிய விமானப் போக்குவரத்து குழுமம் அதிரடி உத்தரவு

பச்சிளம் குழந்தையைக் கொலை செய்ததாக 19 வயது மாணவி மீது கொலைக் குற்றச்சாட்டு

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு


