May 18, 2026
Thisaigal NewsYouTube
பேருந்தில் பாதுகாப்புப் பட்டை அணியாதது:  16 பயணிகளுக்குத் தலா 300 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

பேருந்தில் பாதுகாப்புப் பட்டை அணியாதது: 16 பயணிகளுக்குத் தலா 300 ரிங்கிட் அபராதம்

Share:

அலோர் ஸ்டார், ஜூலை.02-

பேருந்து இருக்கையில் பாதுகாப்புப் பட்டை அணியாத குற்றத்திற்காக 16 பயணிகளுக்குத் தலா 300 ரிங்கிட் அபராதம் விதிக்கும் சம்மன்கள் இன்று வெளியிடப்பட்டன. சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே, இன்று கெடா அலோர் ஸ்டாரில் விரைவு பேருந்துகளில் திடீர் சோதனை மேற்கொண்ட போது, பாதுகாப்புப் பட்டை அணியாமல் இருந்த 16 பயணிகளுக்குச் சம்மன் வழங்கப்பட்டது.

ஒன்வொரு சம்மனுக்கும் அபராதத் தொகை 300 ரிங்கிட்டாகும் என்று கெடா மாநில சாலை போக்குவரத்து இலாகாவின் இயக்குநர் ஸ்டியன் வான் லுத்தாம் தெரிவித்தார்.

ஜுலை முதல் தேதியிலிருந்து பேருந்துகளில் பயணிப்பவர்கள் கட்டாயமாக சீட் பெல்ட் எனப்படும் இருக்கையின் பாதுகாப்புப் பட்டையை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் முதலாவது சிறப்புச் சோதனை, விரைவு பேருந்துகள் மற்றும் சுற்றுலா பேருந்துகளுக்கு எதிராக நேற்று மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பலர், சீட் பெல்ட் அணியாதற்குக் காரணம், அசௌகரியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். எனினும் பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு அவர்கள் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும். இல்லையேல் 300 ரிங்கிட் அபராதத்தைச் சந்திக்க நேரிடும் என்று ஸ்டியன் லுத்தாம் நினைவுறுத்தினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி