Feb 25, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த ஆண்டு முதல் தொடக்கப் பள்ளிகளில் கணிதப் பாட நேரம் அதிகரிப்பு: நாடாளுமன்றத்தில் தகவல்
தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் தொடக்கப் பள்ளிகளில் கணிதப் பாட நேரம் அதிகரிப்பு: நாடாளுமன்றத்தில் தகவல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.25-

தொடக்கப் பள்ளிகளில் 2027-ஆம் ஆண்டுக்கான புதிய பாடத் திட்டத்தின் கீழ், கணிதப் பாடத்திற்கான மொத்த நேரத்தை 608 மணி நேரமாக உயர்த்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. இது குறித்த விவரங்கள் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது நடைமுறையில் உள்ள 576 மணி நேரக் கற்றல் கற்பித்தல் நேரம், புதிய மாற்றத்தின் மூலம் மேலும் 32 மணி நேரம் அதிகரிக்கப்பட உள்ளது. புதிய மாற்றத்திற்கு ஏற்ப நிலை ஒன்றில், ஆண்டு 1 மற்றும் ஆண்டு 2 மாணவர்களுக்கு வாரத்திற்கு 3.5 மணி நேரம் கணிதப் பாடங்கள் நடத்தப்படும்.

நிலை இரண்டில் ஆண்டு 3 மற்றும் ஆண்டு 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிலை மூன்றில் ஆண்டு 5 மற்றும் ஆண்டு 6 மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கணிதக் கோட்பாடுகளைச் சிறப்பாகப் புரிந்து கொள்வதற்கும், அன்றாட வாழ்வில் அவற்றைப் பயன்படுத்துவதற்கும் இந்த கூடுதல் நேரம் உதவும் என்று கல்வி அமைச்சு தனது எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்துள்ளது. மேலும், கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தவும், தகுந்த உதவிகளை வழங்கவும் இது வழிவகுக்கும் என்று அது விளக்கம் அளித்துள்ளது.

Related News

கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்ததாக ரோஹிங்கியா ஆடவர் மீது குற்றச்சாட்டு

கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்ததாக ரோஹிங்கியா ஆடவர் மீது குற்றச்சாட்டு

ரவாங் கோவில் அகற்றப்படுவதற்கு முன்னதாக அமைதியான முறையில் சிலைகள்  மாற்றம்: சிலாங்கூர் போலீஸ் தகவல்

ரவாங் கோவில் அகற்றப்படுவதற்கு முன்னதாக அமைதியான முறையில் சிலைகள் மாற்றம்: சிலாங்கூர் போலீஸ் தகவல்

புனித குர்ஆன் மீது கால் வைத்து அவமதிப்பு - பல்கலைக்கழக மாணவர் கைது

புனித குர்ஆன் மீது கால் வைத்து அவமதிப்பு - பல்கலைக்கழக மாணவர் கைது

சட்ட விதிமுறைகளுக்கு இணங்க வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட வேண்டும்: பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட  பகாங் சுல்தான் வலியுறுத்து

சட்ட விதிமுறைகளுக்கு இணங்க வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட வேண்டும்: பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட பகாங் சுல்தான் வலியுறுத்து

ஏகேபிஎஸ் தளபதி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு - அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி உயிர் தப்பினார்

ஏகேபிஎஸ் தளபதி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு - அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி உயிர் தப்பினார்

குடும்ப வன்முறை குற்றச்சாட்டில் சிக்கிய பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் முதலமைச்சரிடம் மன்னிப்பு

குடும்ப வன்முறை குற்றச்சாட்டில் சிக்கிய பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் முதலமைச்சரிடம் மன்னிப்பு