Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நாயைச் சாகும் வரை அடித்துக் கொன்ற ஆடவரின் செயலுக்குக் கண்டனம் வலுக்கிறது
தற்போதைய செய்திகள்

நாயைச் சாகும் வரை அடித்துக் கொன்ற ஆடவரின் செயலுக்குக் கண்டனம் வலுக்கிறது

Share:

ஈப்போ, செப்டம்பர்.29-

நாய் ஒன்றைச் சாகும் வரை இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற ஆடவர் ஒருவரின் மனிதாபிமானற்றச் செயல் குறித்த காணொளி ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் வேளையில் அந்த மிருகத்தனமானச் செயலைப் புரிந்த நபருக்கு பிராணி வளர்ப்பாளர்கள் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஈவிறக்கமற்றச் செயலில் ஈடுபட்ட அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் வேளையில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதை ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒரு நிமிடம் 31 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளி தொடர்பில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி, ஈப்போ, மெங்களம்பு போலீசார் புகார் ஒன்றைப் பெற்று இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஈப்போ, தாமான் அர்கிட் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகப் பேர்வழியை போலீசார் கைது செய்து இருப்பதாக அபாங் ஸைனால் விளக்கினார்.

2015 ஆம் ஆண்டு பிராணிகள் நலன் காப்புச் சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் விசாரணை செய்யப்பட்டு வரும் வேளையில் தடுப்புக் காவலுக்குப் பிறகு அந்தச் சந்தேக நபர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாயை இரும்புத் தடியால் அடிக்கும் காட்சியைக் கொண்ட காணொளியை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பகிர வேண்டாம் என்றும், இது பிராணிகள் வளர்ப்பாளர்கள் மத்தியில் மன சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் அபாங் ஸைனால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்