பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலாகாக்களில் அவர்களின் நலன் சார்ந்த முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுவதை மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் வும், துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் தியோ வும் மறுத்துள்ளனர். குறிப்பாக, முன்னாள் சொத்துடைமை மேம்பாட்டாளரும், ஆட்சிக்குழு உறுப்பினருமான எஸ். சுந்தரராஜுவிற்கு வீடமைப்புத்துறை மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரு முக்கிய துறைகள் வழங்கப்பட்டது குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் விளக்கம் அளிக்கையில் சௌ கோன் இயோவ் இதனை தெரிவித்தார். வீடமைப்புத்துறையும், சுற்றுச்சூழல் துறையும் ஒரே நபருக்கு எவ்வாறு வழங்க முடியும் என்றும்,அவ்விரு துறைகளும் ஒரே நபருக்கு வழங்கப்பட்டதாக வரலாறுகள் இல்லாத நிலையில் அப்பொறுப்புகள் சுந்தராஜுவிற்கு வழங்கப்பட்டு இருப்பது தார்மீக நெறிமுறைகளுக்கு முரணானதாகும் என்றும் பலர் வாதிட்டு வருகின்றனர்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


