Apr 14, 2026
Thisaigal NewsYouTube
KTMB பயணிகளுக்கு 30 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி / ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

KTMB பயணிகளுக்கு 30 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி / ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு

Share:

மலேசியாவில் வார நாட்களில் இரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 30 விழுக்காடு கட்டண தள்ளுபடி வழங்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று அறிவித்துள்ளார்.

இந்த தள்ளுபடியானது, KTMB நிறுவனத்தின் அனைத்து மின்சார இரயில் சேவைகளான ETS மற்றும் ERT சேவையில், ஜேபி சென்ட்ரல் முதல் தும்பாட் வரையில் உள்ள வழித்தடத்திற்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஏப்ரல் 15 -ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த சலுகையானது, திங்கள் முதல் வியாழன் வரை பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகமாக பயன்படுத்த ஊக்குவிப்பதற்காகவும், பாதுகாப்பான, வசதியான மற்றும் திறன்மிக்க ரயில் சேவையை வழங்குவதை மடாணி அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கையானது, மலேசியர்களின் முதன்மை போக்குவரத்தாக இரயில் பயணத்தை மாற்றும் அரசின் உறுதிப்பாட்டுடன் இணங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

இந்த ஆண்டு இறுதிக்குள் 400 குறைந்த கார்பன் திட்டங்கள் நிறைவடையும்: அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் 400 குறைந்த கார்பன் திட்டங்கள் நிறைவடையும்: அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

வீட்டில் தனியாக வசித்த 69 வயது மூதாட்டி உயிரிழப்பு; 4 நாட்களுக்குப் பின் உடல் மீட்பு

வீட்டில் தனியாக வசித்த 69 வயது மூதாட்டி உயிரிழப்பு; 4 நாட்களுக்குப் பின் உடல் மீட்பு

14 மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் - இரண்டு பெண்கள் மீதும் குற்றச்சாட்டு

14 மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் - இரண்டு பெண்கள் மீதும் குற்றச்சாட்டு

14 ஆவது பொதுத் தேர்தல்  தோல்விக்குப் பிறகு நஜிப் வீட்டிலிருந்து பைகள், பெட்டிகள் மாற்றம்: நீதிமன்றத்தில்  அமார் சிங் சாட்சியம்

14 ஆவது பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நஜிப் வீட்டிலிருந்து பைகள், பெட்டிகள் மாற்றம்: நீதிமன்றத்தில் அமார் சிங் சாட்சியம்

கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரைப் புத்தாண்டு சிறப்புப் பூஜை: 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரைப் புத்தாண்டு சிறப்புப் பூஜை: 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

4,165 மாணவர்கள் IPT 5.0 நிதி உதவியைப் பெறுகின்றனர்: மித்ரா கட்டம் கட்டமாக நிதியை விநியோகிக்கத் தொடங்கியது

4,165 மாணவர்கள் IPT 5.0 நிதி உதவியைப் பெறுகின்றனர்: மித்ரா கட்டம் கட்டமாக நிதியை விநியோகிக்கத் தொடங்கியது