கோலாலம்பூர், ஆகஸ்ட் 19
முன்னாள் பிரதமர் , Datuk Seri Najib Razak -கிற்கு எதிரான 1MDB நிறுவனத்துக்குச் சொந்தமான 2.3 பில்லியன் ரிங்கிட் மோசடி குற்றச்சாட்டுகளுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட சான்றில் போதிய தெளிவில்லை என்று இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பாக, 4 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி மொத்தம் 2,500 பக்கங்கள் அடங்கிய சான்றுகளைப் பிரதிவாதிகள் முன்வைத்ததில் எவ்வித பயனும் இல்லை என்று வழக்கறிஞர் Tan Sri முஹம்மது ஷஃபீ அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சான்றுகளைச் சுருக்கமாக தெளிவாகவும் சமர்ப்பிக்க தவறுயதற்கு மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுகிறது.








