Mar 13, 2026
Thisaigal NewsYouTube
Cradle Fund நிறுவன முன்னாள் சிஇஓ கொலை வழக்கு: நீதிமன்றத்தின் முடிவை ஏற்ற குடும்பத்தினர்
தற்போதைய செய்திகள்

Cradle Fund நிறுவன முன்னாள் சிஇஓ கொலை வழக்கு: நீதிமன்றத்தின் முடிவை ஏற்ற குடும்பத்தினர்

Share:

புத்ராஜெயா, ஜனவரி.10-

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம், தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட Cradle Fund நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி நஸ்ரின் ஹசான் கொலை வழக்கில், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகியும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரது குடும்பத்தினர் உள்ளனர்.

இவ்வழக்கில், நஸ்ரினின் விதவை மனைவி சமீரா முஸாஃபார், இரண்டு பதின்ம வயது இளைஞர்கள் மற்றும் ஒரு பணிப்பெண் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

என்றாலும், நடைபெற்ற விசாரணைகளின் முடிவில், கடந்த 2022-ஆம் ஆண்டு, அவர்கள் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், கடந்த ஜனவரி 7-ஆம் தேதி, ஃபெடரல் நீதிமன்றமும், அவர்களது விடுதலையை உறுதிச் செய்தது.

இந்நிலையில், ஃபெடரல் நீதிமன்றத்தின் முடிவைத் தாம் ஏற்றுக் கொள்வதாக நஸ்ரினின் சகோதரர் டாக்டர் மாலேக் ஹசான் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் முடிவிற்கு எதிராக தான் கருத்து கூற விரும்பவில்லை என்றும் கூறிய மாலேக், இறந்த தனது சகோதரரருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்போதும் தமது குடும்பத்தினருக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்