Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சட்டநடைமுறைகளைப் பின்பற்றிய பின்னரே, சிங்கப்பூரில் பன்னீர் செல்வம் தூக்கிலிடப்பட்டார் - உள்துறை அமைச்சு விளக்கம்
தற்போதைய செய்திகள்

சட்டநடைமுறைகளைப் பின்பற்றிய பின்னரே, சிங்கப்பூரில் பன்னீர் செல்வம் தூக்கிலிடப்பட்டார் - உள்துறை அமைச்சு விளக்கம்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.03-

சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் முழுமையான சட்டநடைமுறைளைப் பின்பற்றிய பின்னரே மலேசியரான பன்னீர் செல்வம் பரந்தாமன் தூக்கிலிடப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மலேசியா பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாத கொள்கையையும், அந்நாடுகளின் இறையாண்மை நிலைப்பாட்டையும் மதிக்கிறது என்றும், கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னீர் செல்வத்தை வேலைக்கு அமர்த்தியவர்கள் பற்றிய விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, அவர் தூக்கிலிடப்பட்டது குறித்து, புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் எழுப்பிய கேள்விக்கு, எழுத்துப்பூர்வ பதிலளித்த உள்துறை அமைச்சு, இவ்வாறு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி, சிங்கப்பூர் போலீசாரின் அனுமதியுடன், பன்னீர் செல்வத்திடம் மலேசியப் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆனால் அவ்விசாரணையில், பன்னீர் செல்வம் குற்றம் சாட்டிய சில நபர்களுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று மலேசிய போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், வெளிநாடுகளில் வாழும் மலேசியர்கள், அங்குள்ள சட்டங்களை மீறினால், அந்நாட்டின் சட்டங்களின் படி தண்டனைக்கு உட்படுவார்கள் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.

38 வயதான பன்னீர் செல்வம் அக்டோபர் 8-ஆம் தேதி, சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை