மலாக்காவில் நடந்த பயங்கர கார் விபத்தின் போது, காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஒரு மாதக் குழந்தை, அதிர்ஷ்டவசமாகப் புல்வெளியில் விழுந்து உயிர் தப்பியுள்ளது.
நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில், அலோர் காஜா-மலாக்கா தெங்கா-ஜாசின் சாலையில் உள்ள எண்ணெய் நிலையத்திலிருந்து ஒரு கார் வெளியேறியபோது மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, பின் இருக்கையில் தாயின் மடியில் இருந்த ஆண் குழந்தை, காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த புல்வெளியில் விழுந்தது.
இவ்விபத்தில் குழந்தையின் தலையில் வீக்கமும், தாய்க்கு முதுகுவலியும் ஏற்பட்டது. தந்தை காயமின்றி தப்பினார். மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய மற்றொரு வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் கீழ் போலீசார் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மலாக்கா தெங்கா மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன்ட் ஹலிம் அபாஸ் தெரிவித்தார்.








