Aug 6, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் தன்னார்வத் தொண்டர் குழு களமிறக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் தன்னார்வத் தொண்டர் குழு களமிறக்கப்பட்டுள்ளது

Share:

டிச. 30-

சுங்கை பூலோவில் உள்ள Taman Seri Alamஇல் அணை உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் தன்னார்வத் தொண்டர் குழு களமிறக்கப்பட்டுள்ளது என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ராமனன் ராமகிருஷ்ணன் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்

குடியிருப்பாளர்களின் நலனைப் பாதுகாக்க தனது குழு எப்போதும் செயல்படும் என்று உறுதி அளித்துள்ளார் ரமணன். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகளில் ஈடுபட்ட தீயணைப்புத் துறை, காவல்துறை, அரசு நிறுவனங்கௐ ஆகியவற்றுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அவர்களின் துரித நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி கிடைத்ததாகத் தமது பாராட்டையும் பதிவு செய்தார்.

டேங்க் குளம் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிவாரணப் பணிகளும், எதிர்கால தடுப்பு நடவடிக்கைகளும் குறித்து அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் தன்னார்வத் த... | Thisaigal News