ஜூலை 21-
வருகின்ற ஆகஸ்டு மாதம், மலேசிய நாட்டின் சுதந்திர மாதமாக கருத்தப்படுவதால், அதனை முன்னீட்டு மலேசிய மக்கள் மலேசிய கொடியைப் பறக்கவிடுமாறு நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
சுதந்திரத்தினம் எந்தவொரு மதம் , இனம், கட்சி, தகுதி சார்ந்த கொண்டாட்டம் அல்ல. மாறாக அது நாட்டின் மீது வைத்துள்ள பற்றை வெளிப் படுத்தும் கொண்டாட்டம் என்பதால், அனைத்து மலேசிய மக்களும் ஒன்றிணைந்து மலேசியாவின் சுதந்திரத் தினத்தைக் கொண்டாட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.








