மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டுள்ள சீன நாட்டுப் பிரதமர் லி கியாங், மரியாதை நிமித்தமாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை இன்று இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.
பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, மலேசியாவிற்கான சீன நாட்டுத் தூதர் ஓயாங் யுஜிங் மற்றும் சீன நாட்டுப் பேராளர் குழுவினர் உடன் இருந்தனர்.
மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ செரி முகமட் ஹசன் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உட்பட முக்கிய அமைச்சர்களும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.








