Mar 17, 2026
Thisaigal NewsYouTube
லங்காவி படகு விபத்து: மேலும் 5 சடலங்கள் மீட்பு! பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!
தற்போதைய செய்திகள்

லங்காவி படகு விபத்து: மேலும் 5 சடலங்கள் மீட்பு! பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

Share:

லங்காவி, நவம்பர்.11-

மலேசியா–தாய்லாந்து எல்லைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட படகு விபத்தில் கடலில் மூழ்கியவர்களைத் தேடும் பணி மூன்றாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

நேற்று திங்கட்கிழமை, மேலும் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதையடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

100 புலம்பெயர்ந்தவர்களைக் கொண்டிருந்த அப்படகில், இதுவரை, 13 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கெடா மற்றும் பெர்லிஸ் மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் இயக்குநர் ரொம்லி முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.

கடல் சீற்றம் காரணமாக நேற்று இரவு 7.30 மணியோடு தேடுதல் பணிகள் நிறைவு பெற்று இன்று செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் துவங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு