Dec 2, 2025
Thisaigal NewsYouTube
லங்காவி படகு விபத்து: மேலும் 5 சடலங்கள் மீட்பு! பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!
தற்போதைய செய்திகள்

லங்காவி படகு விபத்து: மேலும் 5 சடலங்கள் மீட்பு! பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

Share:

லங்காவி, நவம்பர்.11-

மலேசியா–தாய்லாந்து எல்லைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட படகு விபத்தில் கடலில் மூழ்கியவர்களைத் தேடும் பணி மூன்றாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

நேற்று திங்கட்கிழமை, மேலும் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதையடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

100 புலம்பெயர்ந்தவர்களைக் கொண்டிருந்த அப்படகில், இதுவரை, 13 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கெடா மற்றும் பெர்லிஸ் மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் இயக்குநர் ரொம்லி முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.

கடல் சீற்றம் காரணமாக நேற்று இரவு 7.30 மணியோடு தேடுதல் பணிகள் நிறைவு பெற்று இன்று செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் துவங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்