May 28, 2026
Thisaigal NewsYouTube
இஸ்மாயில் சப்ரியிடம் இரண்டாவது நாளாக எஸ்பிஆர்எம் விசாரணை
தற்போதைய செய்திகள்

இஸ்மாயில் சப்ரியிடம் இரண்டாவது நாளாக எஸ்பிஆர்எம் விசாரணை

Share:

புத்ராஜெயா, மார்ச்.14-

177 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது தொடர்பில் ஊழல், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் இரண்டாவது நாளாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணை செய்து வருகிறது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 8.46 மணியளவில் இஸ்மாயில் சப்ரியின் கார், ரோந்துப் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமை அலுவலகக் கட்டட நுழைவாயிலில் நுழைந்தது.

நுழைவாயிலில் காத்திருந்த செய்தியாளர்களை நோக்கி புன்னகைத்தவாறு இஸ்மாயில் சப்ரி சென்றார். நேற்று முதல் முறையாக 5 மணி நேரத்திற்கும் அதிமாக இஸ்மாயில் சப்ரியிடம் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் விசாரணை செய்த வேளையில் அதன் தொடர்ச்சியாக இன்று அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் அதிகாரியின் வீட்டிலிருந்து 177 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணம், தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது தொடர்பில் அவரிடம் விசாரணை செய்வது, வாக்குமூலம் பெறப்படுவது மிக முக்கியமானதாகும் என்று எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இஸ்மாயில் சப்ரியின் நான்கு முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் ஒருவரின் வீட்டிலிருந்துதான் கட்டுக்கட்டாக ரொக்கப் பணமும், தங்கக் கட்டிகளும், இதர விலை உயர்ந்தப் பொருட்களும் மீட்கப்பட்டன.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்