Mar 21, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தியதாக மூதாட்டி உட்பட மூவர் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தியதாக மூதாட்டி உட்பட மூவர் குற்றச்சாட்டு

Share:

பொண்டியன் , மே 15-

சட்டவிரோதமாக போதைப்பொருட்களை கடத்தி வைத்திருந்ததாக மூதாட்டி உட்பட மூன்று ஆண்கள் பொண்டியன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.

75 வயது சான் ஆ மொய் என்கிற அந்த மூதாட்டி உட்பட மேலும் மூன்று சீன ஆடவர்கள் மாஜிஸ்திரேட் நூர் அசுவின் அப்துல் மோதி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது தலையசைத்தனர்.

இவ்வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதால் குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்நபர்களிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 1 லட்சம் வெள்ளி அபராதம் அல்லது ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 12(2) , 12(3) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த மே 4 ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் ஜொகூர், பொண்டியன், குக்குப் லாவுட் - டில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளன.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து