Feb 14, 2026
Thisaigal NewsYouTube
2030-க்குள் மலேசியாவை 'AI தேசமாக' மாற்றும் அரசாங்கத்தின் GII திட்டம்: அமைச்சர் கோவிந்த் சிங் டியோ அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

2030-க்குள் மலேசியாவை 'AI தேசமாக' மாற்றும் அரசாங்கத்தின் GII திட்டம்: அமைச்சர் கோவிந்த் சிங் டியோ அறிவிப்பு

Share:

புத்ராஜெயா, பிப்ரவரி.14-

2030-க்குள் மலேசியாவை AI தேசமாக மாற்றும் இலக்குடன், அரசாங்க கண்டுபிடிப்பு முயற்சியாக ஜி.ஐ.ஐ. (GII) திட்டத்தை இலக்கவியல் அமைச்சகம் முடுக்கிவிட்டுள்ளது. ‘Made by Malaysia’ தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளித்து, 'RadioConnect' மூலம் மருத்துவக் கண்டறிதலில் AI பயன்பாட்டை மேம்படுத்தி, 'Citizen Labs' வழியாக பொதுமக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அரசு திட்டமிட்டுள்ளது என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

இந்த முயற்சியானது, மலேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தின் கீழ் Futurise நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன், உள்ளூர் கண்டுபிடிப்புகளைப் பொது துறைத் தேவைகளுடன் இணைத்து, டிஜிட்டல் பொருளாதாரத்தை உலக அளவில் கொண்டு செல்ல வழிவகை செய்யும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, Futurise Sdn. Bhd. நிறுவனம் இனி மலேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தின் கீழ் செயல்படும் என்றும், இது தேசிய ஒழுங்குமுறை சாண்ட்பாக்ஸ் ( Sandbox) மூலம் திட்டங்களை விரைவுபடுத்தும் என்றும் அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.

பொதுமக்களின் சவால்களுக்கு மலேசிய தயாரிப்பு AI தீர்வுகளை இணைப்பதன் மூலம், 2030-க்குள் ஒரு முன்னணி டிஜிட்டல் நாடாக மலேசியா உருவெடுக்கும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

Related News

நேர்மையும் சமூகப் பாதுகாப்பும் முக்கியம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் வலியுறுத்து

நேர்மையும் சமூகப் பாதுகாப்பும் முக்கியம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் வலியுறுத்து

சீனப் புத்தாண்டு, ரமலான் எதிரொலி: முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு - எல்எல்எம் தகவல்

சீனப் புத்தாண்டு, ரமலான் எதிரொலி: முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு - எல்எல்எம் தகவல்

ரவாங் கோயில் இடிப்பு: "இனவாத ரீதியாகச் சித்தரிக்க வேண்டாம்" - சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் அறிவுறுத்தல்

ரவாங் கோயில் இடிப்பு: "இனவாத ரீதியாகச் சித்தரிக்க வேண்டாம்" - சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் அறிவுறுத்தல்

பொதுப் பணத்தைக் கையாடல் செய்தால் கைது உறுதி: தலைவர்களுக்கு அன்வார் கடும் எச்சரிக்கை

பொதுப் பணத்தைக் கையாடல் செய்தால் கைது உறுதி: தலைவர்களுக்கு அன்வார் கடும் எச்சரிக்கை

பெண் கொலை செய்யப்பட்டு உடல் துண்டிக்கப்பட்ட விவகாரம்: எஞ்சிய இரண்டு உடல் பாகங்களைத் தேடும் போலீஸ் துறை

பெண் கொலை செய்யப்பட்டு உடல் துண்டிக்கப்பட்ட விவகாரம்: எஞ்சிய இரண்டு உடல் பாகங்களைத் தேடும் போலீஸ் துறை

தெமர்லோ அருகே Porsche கார் மோதி விபத்து: கணவன், மனைவி தீயில் கருகிப் பலி

தெமர்லோ அருகே Porsche கார் மோதி விபத்து: கணவன், மனைவி தீயில் கருகிப் பலி