Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கேஎல்சிசி அருகே உரிமம் இன்றி புகைப்பட சேவை வழங்கிய 22 பேரிடம் டிபிகேஎல் விசாரணை
தற்போதைய செய்திகள்

கேஎல்சிசி அருகே உரிமம் இன்றி புகைப்பட சேவை வழங்கிய 22 பேரிடம் டிபிகேஎல் விசாரணை

Share:

கோலாலம்பூர், நவம்பர்.22-

நேற்று இரவு, பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் அருகே கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் நடத்திய அமலாக்க நடவடிக்கைகளின் போது, முறையான உரிமம் இன்றி, புகைப்படச் சேவைகளை வழங்கிய 22 பேருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதிகளில் சட்டவிரோதமாக வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் குறி வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டிபிகேஎல் தெரிவித்துள்ளது.

அவர்களிடமிருந்து புகைப்படக் கருவிகள் உள்ளிட்ட முக்கியப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள், அபராதத் தொகையைச் செலுத்தி விட்டு அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தச் சிறப்பு நடவடிக்கையானது போலீசார் மற்றும் தேசிய பதிவிலாகா அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்