Jul 5, 2026
Thisaigal NewsYouTube
பேரணிக்குரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்
தற்போதைய செய்திகள்

பேரணிக்குரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.12-

ஹிம்புனான் துருன் அன்வார் எனும் அன்வாரைப் பதவி இறங்கச் சொல்லும் பேரணி நடைபெறும் வேளையில், அந்தப் பேரைப் நடைபெறுவதற்கான நடைமுறைகளைப் போலீசார் எளிதாக்க வேண்டும் என்று பாஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு அமைதிப் பேரணி சட்டத்தின் 9 ஆவது பிரிவு, 5 ஆவது ஷரத்து, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று அண்மையில் கூட்டரசு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து அமைதிப் பேரணி நடைபெறுவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும் என்ற பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் போலீஸ் துறையைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கூட்டரசு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் அமைதிப் பேரணி நடத்தப்படுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உரிமை இருக்கிறது. எனவே பொதுமக்களால் நடத்தப்படவிருக்கும் இந்தப் பேரணிக்கு கெடுபிடிகளின்றி போலீஸ் துறை வழிவிட வேண்டும் என்று தக்கியுடின் ஹசான் வலியுறுத்தியுள்ளார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது