Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரிடம்  மன்னிப்புக் கோரினார் வேதமூர்த்தி
தற்போதைய செய்திகள்

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரிடம் மன்னிப்புக் கோரினார் வேதமூர்த்தி

Share:

கோலாலம்பூர், நவம்பர்.08-

நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட்டின் பதவிக் காலத்தை நீட்டிக்காமல் போனதற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்குத் தனிப்பட்ட மறைமுக நோக்கங்கள் இருந்ததாகத் தாம் கூறிய தவறான குற்றச்சாட்டிற்காக பிரதமரிடம் தாம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவர் P. வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் தலைமை நீதிபதி தெங்கு மைமூனின் பதவிக் காலத்தை டத்தோ ஶ்ரீ அன்வார் நீட்டிக்கவில்லை. காரணம், அப்பீல் நீதிமன்றத்தில் அன்வார் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் தெங்கு மைமூன் தீர்ப்பு வழங்கியிருந்தார் என்று தாம் தவறாகக் கூறிவிட்டதாக வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு தமக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் அப்படியோர் அறிக்கையை வெளியிட்டு விட்டதாகவும், அந்த தகவல்களைத் தற்போது சரிபார்த்ததில் அன்வார் சம்பந்தப்பட்ட எந்தவொரு வழக்கிலும் தெங்கு மைமூன் சம்பந்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளதாகவும் வேதமூர்த்தி தெரிவித்தார்.

இப்படியொரு தவறான அறிக்கையை வெளியிட்டதற்காக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரிடமும், முன்னாள் தலைமை நீதிபதி தெங்கு மைமூனிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக முன்னாள் ஒற்றுமைத்துறை அமைச்சரான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரிடம் மன்னிப்புக் கோரினார் வேதமூ... | Thisaigal News