May 21, 2026
Thisaigal NewsYouTube
வாய்க்காலில் விழுந்து இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

வாய்க்காலில் விழுந்து இருவர் உயிரிழந்தனர்

Share:

கோத்தா திங்கி,ஜன.11
குவாலா செடிலி,கம்போங் பெர்பாட்டில் உள்ள வாய்க்காலில் விழுந்து, நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர்.

நேற்று பிற்பகல் 1:25 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கோத்தா திங்கி ஓசிபிடி சுப்ரிதென்டன் ஹுச்யின் சமோரா தெரிவித்தார்.

15க்கும் 19க்கும் வயதிற்கு உட்பட்ட முஹமாட் ஐரெல் இஸ்கன்டார் முஹமாட் அலிஃப் மற்றும் முஹமாட் அசிஹான் பஹாரும் ஆகியோர் மீன் பிடிக்க சென்ற போது வடிக்காலில் தவறி விழுந்ததாக ஹுசின் சமோரா ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

சவப் பரிசோதனைக்காக அவ்விருவர்களின் உடலும் கோத்தா திங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஹுசின் சமோரா விவரித்தார்.

Related News