May 27, 2026
Thisaigal NewsYouTube
யமுனா ஆற்றின் கரையில் மன்மோகன் சிங் உடல் தகனம்
தற்போதைய செய்திகள்

யமுனா ஆற்றின் கரையில் மன்மோகன் சிங் உடல் தகனம்

Share:

புதுடில்லி, டிச. 28-


இந்திய முன்னாள் பிரதமரும், இந்திய பொருளாதார மேதையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் நல்லுடல் முழு அரசு மரியாதையுடன் யமுனா ஆற்றின் கரையில் இன்று தகனம் செய்யப்பட்டது.

மன்மோகன் சிங்கின் நல்லுடல், டெல்லியில் அவரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்பின்னர், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து, மன்மோகன் சிங்கின் நல்லடக்க சடங்கு இறுதி ஊர்வலம் துவங்கி, யமுனா ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகாம்போத் காட் பகுதியை அடைந்தது.

அங்கு முப்படைகளின் ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்திய அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் நேற்று தமது 92 ஆவது வயதில் காலமான முன்னாள் பிரதமருக்கு, இறுதி அஞ்சலி செலுத்தியவர்களில் அடங்குவர்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு