Jun 29, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி

Share:

கோலாலம்பூர், நவம்பர்.28-

பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் ஷாம்சுல் இஸ்கண்டாருக்கு 6 லட்சத்து 29 ஆயிரம் ரிங்கிட்டைத் தாம் லஞ்சமாகக் கொடுத்ததாகக் கூறியிருக்கும் வர்த்தகர் ஆல்பெர்ட் தே-யை இன்று காலையில் அவரின் வீட்டில் கைது செய்யும் நடவடிக்கையில் அவரின் தலையில் 6 துப்பாக்கிகள் வைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி வன்மையாக மறுத்தார்.

பூச்சோங்கில் உள்ள ஆல்பெர்ட் தே-யின் வீட்டில் நடந்த கைது நடவடிக்கையில் எஸ்ஓபி எனும் சீரான செயலாக்க நடைமுறையைப் பின்பற்றியே எஸ்பிஆர்எம் அதிகாரிகள் கைது செய்தனர் என்று அஸாம் பாக்கி தெளிவுபடுத்தினார்.

எஸ்பிஆர்எம் அதிகாரிகளுக்கு எதிராக ஆல்பெர்ட் தே கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் ஆல்பெர்ட் தே, சம்பந்தப்பட்ட வழக்கில் முக்கியச் சாட்சியாகத் திகழ்கிறார். அதன் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது. இது குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் எஸ்பிஆர்எம்மிற்குக் களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கு தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஸாம் பாக்கி நினைவுறுத்தினார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு