Mar 31, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு ஆளுநராக மே முதல் தேதி பதவி உறுதி எடுத்துக் கொள்வார் துன் ரம்லி ங்கா தாலிப்
தற்போதைய செய்திகள்

பினாங்கு ஆளுநராக மே முதல் தேதி பதவி உறுதி எடுத்துக் கொள்வார் துன் ரம்லி ங்கா தாலிப்

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.25-

பினாங்கு மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள துன் ரம்லி ங்கா தாலிப், வரும் மே முதல் தேதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வார் என்று மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.

துன் ரம்லி ங்கா தாலிப்பின் பதவி உறுதிமொழிச் சடங்கு, டேவான் ஶ்ரீ பினாங்கில் நடைபெறும். பினாங்கு மாநில அரசிலமைப்புச் சட்டம் முதலாவது விதியின் கீழ் பதவி உறுதிமொழிச் சடங்கு நடைபெறும்.

பதவி உறுதிமொழிச் சடங்கை பினாங்கு அரசு செயலாளர் டத்தோ ஸுல்கிப்ளி லோங் முன்நின்று நடத்துவார் என்று சோவ் கோன் யோவ் குறிப்பிட்டார்.

பேரா மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாரும், நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் தலைவருமான 84 வயது துன் ரம்லி ங்கா தாலிப், பினாங்கு மாநிலத்தின் புதிய ஆளுநராக மாமன்னர் சுல்தான் இப்ராஹிடமிருந்து நேற்று பதவி நியமனக் கடிதத்தைப் பெற்றார்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை