Mar 10, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு ரோஹிங்யா ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு ரோஹிங்யா ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்

Share:

வயது குறைந்த பள்ளி மாணவி ஒருவரை காருக்குள் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக இரண்டு ரோஹிங்யா ஆடவர்கள் மலாக்கா, அயேர் கெரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

27 வயது முகமட் ஒஸ்மான் போஷோர் மற்றும் 14 வயதுடைய இளைஞர் ஆகியோர் நீதிபதி முகமட் சப்ரி இஸ்மயில் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இவ்விருவரும் கடந்த வாரம் வியாழக்கிழமை மலாக்கா, பந்தாய் கெளெமாங் கில் ஒரு காருக்குள் 15 வயது பள்ளி மாணவியை மாறி, மாறி பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 30ஆண்ட சிறைத் தண்டனை விதிக்க வகைசெய்யும் குற்றவியல் சட்டம்ட 376 பிரிவின் கீழ் இரண்டு ரோஹிங்யா ஆடவர்களும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

எனினும் இருவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களை தலா 20ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related News

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்