ஜோகூர் பாரு, ஜன.27-
சீனப்புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ஜோகூர் மாநிலத்தில் 49 இடங்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
இவற்றில் இரண்டு இடங்கள் கவன ஈர்ப்புக்குரிய பகுதிகளாக விளங்குகின்றன. ஜோகூர்பாரு, Bangunan Sultan Iskandar மற்றும் Gelang patah, Komplex Sultan Iskandar ஆகியவையே அவ்விரு இடங்களாகும்.
தவிர 31 இடங்கள் கறுப்புப்பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அ ப்பகுதிகள் அடிக்கடி விபத்துக்கள் நிகழும் இடங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.
சீனப்புத்தாண்டையொட்டி ஜோகூர், Kempas,Plaza Tol Kempas-ஸில் Op Selamat 23 வாகமோட்டிகள் பாதுகாப்புத்திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
ஒட்டுமொத்தத்தில் 80 இடங்கள் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன இப்பகுதிகளை போலீசார் அணுக்கமாக கண்காணிப்பர் என்று டத்தோ குமார் மேலும் கூறினார்.







