கோலாலம்பூர்,ஜன.22
சரவா மாநிலத்திற்கு புதிய ஆளுநர் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.அதேவேளையில் மேலவைத் தலைவராக பொறுப்பு வகித்து வரும் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவான்கு ஜாஃபார் பதவி காலியாகவிருப்பதாக கூறப்படுகிறது. 78 வயதான , சரவா மாநிலத்தின் எட்டாவது ஆளுநரான பதவியில் அமரவிருக்கிறார் என்று கோடி காட்டப்பட்டுள்ளது.
புதிய மேலவைத் தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவது தொடர்பில் ஒற்றுமை அரசாங்கத்தின் செயலகம் இன்றிரவு கலந்து ஆலோசிக்கவிருப்பதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சரவா மாநில ஆளுநராக பதவி வகித்து வரும் துன் அப்துல் தாயிப் மஹ்முட் பதவி விலகவிருப்பதையொட்டி புதிய ஆளுநர் நியமிக்கப்படவிருக்கிறார். பழம் பெரும் அரசியல்வாதியும், சரவா மாநிலத்தில் 33 ஆண்டு காலம் மாநில முதலமைச்சராக பதவி வகித்தவரான 87 வயது அப்துல் தாயிப் மஹ்முட்சுகவீனப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.








