கோலாலம்பூர், ஜுலை 10-
ஃப்ளீட் கார்டுகளை வழங்குவதை துரிதப்படுத்துமாறு எண்ணெய் நிறுவனங்களைஉள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
SKDS எனப்படும் மானியத்துடன் கூடிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்புதிட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தகுதியான லாஜிஸ்டிக் வாகன உரிமையாளர்களுக்கு,
சாலைப் போக்குவரத்துத் துறையுடன் ஒருங்கிணைந்த அமைப்பைப் பயன்படுத்தி, தேவையான அனைத்து ஆவணங்களும் முழுமையாக இருந்தால், அமைச்சு அளவில் உடனடி அனுமதி வழங்கப்படலாம் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி கூறினார்.
‘ஃப்ளீட் கார்டு’ வழங்குவதில் தற்போதுள்ள சிக்கல்களை ஒப்புக்கொண்ட அவர், "இந்த சவால்களை எதிர்கொள்ள ஐந்து எண்ணெய் நிறுவனங்களுடன் தீவிரமாக விவாதித்து வருவதாகக் கூறினார்.
நிதி அமைச்சினால் எளிதாக்கப்படும் ஃப்ளீட் கார்டுகளுக்காக காத்திருப்போருக்கு திருப்பிச் செலுத்தும் செயல்முறையை எளிதாக்குவதுடன், இடைக்கால நடவடிக்கையாக பண அட்டைகளைப் பயன்படுத்த எண்ணெய் நிறுவனங்களை ஊக்குவித்துள்ளதாக அவர் கூறினார்!








