Jun 15, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் பைக் சாகசம்: வைரல் வீடியோவில் சிக்கிய 7 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் பைக் சாகசம்: வைரல் வீடியோவில் சிக்கிய 7 பேர் கைது

Share:

கோலாலம்பூரின் முக்கிய சாலைகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்ததாக, ஒரு பெண் உட்பட மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மே 23 அன்று அதிகாலை 3:30 மணியளவில் ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் துன் ரசாக் மற்றும் ஜாலான் பி. ராம்லி ஆகிய சாலைகளில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதுதொடர்பான 44 விநாடிகள் கொண்ட வீடியோ மே 31 அன்று முகநூலில் வைரலானதைத் தொடர்ந்து, போக்குவரத்து அமலாக்க மற்றும் புலனாய்வுத் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

நேற்ற ஜூன் 1 ஆம் தேதி அதிகாலை நடத்திய சோதனையில், 20 வயது இளைஞர் மற்றும் அவரது 16 வயது காதலி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 18 வயதிற்குட்பட்டவர்கள் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கியதற்கான சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்