Aug 12, 2026
Thisaigal NewsYouTube
அமலாக்க அதிகாரியை மிரட்டியதற்காக வணிகருக்கு 6 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

அமலாக்க அதிகாரியை மிரட்டியதற்காக வணிகருக்கு 6 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

கோலாலம்பூர், மே.19-

கடந்த மார்ச் மாதம் இறுதியில் பலூன் வியாபாரி ஒருவருக்கு எதிராக எடுக்கப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அமலாக்க அதிகாரியை மிரட்டிய குற்றத்திற்காக துணி வியாபாரி ஒருவருக்கு கோலாலம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 6 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 6 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.

பலூன் வியாபாரிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதைப் போல அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்த்து பொது மக்களைத் தூண்டிவிடும் நோக்கில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக முஸ்தாபா சுலைமான் என்ற 57 வயதுடைய அந்தத் துணி வியாபாரி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் செராஸ், பண்டார் துன் ரஸாக்கில் உள்ள மெனாரா டிபிகேஎல் கட்டடத்தில் அந்தத் துணி வியாபாரி இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்